கருவேப்பிலை என்றதுமே நம் அனைவரது நினைவுக்கும் வருவது முடி நன்றாக வளரும் என்பதே.



உணவுகளில் தினமும் பயன்படுத்தினால், பலரும் அதை சாப்பிடாமல் தூக்கி எறியத்தான் செய்வோம்.


ஆயுர்வேத மருத்துவத்தில் கூட கருவேப்பிலையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன.

சுண்ணாம்பு சத்து, மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்றவையும் கருவேப்பிலையில் உண்டு.

இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது கருவேப்பிலை. உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும். எனவே கருவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளை கரைப்பதுடன், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது, எனவே உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

குறிப்பாக கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள் இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.

இதில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளதால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஓக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் உடலில் இரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.

இதில் ஆன்டி பக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது, ப்ரஷ்னா கருவேப்பிலையை பேஸ்ட் செய்து, இதனுடன் மஞ்சள் சேர்த்து பருக்கள் இருந்த இடத்தில் தடவினால் பருக்கள் மறைந்துவிடும்.

குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படும் நபர்கள் கருவேப்பிலையை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.


தொப்பையை குறைக்க இந்த பதிவை பார்க்க: தொப்பைய குறைக்க எளிய வழி முறைகள் - இயற்கை வைத்தியம்
Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
வாவ் தமிழ் © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top